பார்ப்பனர்களின் தேவபாஷையான சமஸ்கிர்தம் 1930 ஆம் ஆண்டுவரையில் இந்திய மருத்துவத் துறையில் சமஸ்கிர்தம் போதிக்கப்பட்டதாம்! கணினி மென்பொருள் எழுதுவதற்கேற்ற மொழி என்ற புரளியை ஒரு ஐரோப்பிய பத்திரிக்கை எழுதியதாகச் சொல்லி, பார்ப்பன சமஸ்கிர்த பாஷையை ஆஹா! ஓஹோ என்று சில வலைப்பூ அன்பர்கள் சிலாகித்து எழுதி வருகிறார்கள். ஆமாம்! அதற்கென்ன இப்போது என்கிறீர்களா?
பிராமணர்கள் எதையும் எல்லா மூடப்பழக்க வழக்கங்களையும் விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டது என்று வாதிடுவது வழக்கம். ஆனால் மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் இதில் முற்றாக மாறுபடுகின்றார்கள். சேது சமுத்திரத்திலுள்ள மணல் திட்டுகளை "குரங்குகள் கட்டிய பாலம்" என்று சொல்லவில்லையா! அதுபோலதான் சமஸ்கிர்த மொழியைப் பற்றிய புரட்டுகளும் என்பதைப் பார்ப்போம்.இதோ சில எடுத்துக்காட்டுகள்:
1) பூமி தட்டையானதுநரசிங்கபுராணம் பக்கம் 169 அபிதான சிந்தாமணி கூறுகின்றது பூமி தட்டையானது. ஆனால் இன்று விஞ்ஞானம் ஐயத்திற்கிடமின்றி பூமி உருண்டையானது என்று நிரூபித்துள்ளது.
2) பூமி, சூரியன் - சந்திரன் இவற்றிற்கிடையேயுள்ள இடைவெளி தூரம்:விஷ்னுபுராணம் கூறுகின்றது: சூரியன் 800,000 மைல்களுக்கப்பால் இருப்பதாகவும், சந்திரன் 2,200,000 மைல்களுக்குப்பால் இருப்பதாகவும் கூறுகின்றது. ஆனால் விஞ்ஞானம், சந்திரன் தான் பூமிக்குப் பக்கத்தில் இருக்கின்றது என்றும் அதற்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் 240,000 மைல்கள் என்றும் சூரியன் 93,000,000 மைல்களுக்கப்பால் இருக்கின்றது என்றும் கண்டுபிடித்து நிரூபித்துள்ளது.
3) பூமியின் பரப்பளவு:மார்கண்டேய புராணம் கூறுகின்றது: பூமியின் பரப்பளவு 4,000,000,000 சதுர மைல்கள். ஆனால் விஞ்ஞானம் அறுதி இட்டுக் கூறுகின்றது. பூமியின் பரப்பளவு 190,700,000 சதுர மைல்கள் மட்டுமே!
4) மாட்டுச்சாணம் - விபூதி:வேதங்கள் கூறுகின்றன. பசு புனிதமானது. ஆகவே அது வணக்கத்திற்குரியது. பிராமணர்கள் இன்னொரு படி மேலே போய் மாட்டுச் சாணத்தில் எடுக்கப் படும் சாம்பல் புனிதமானது. அதற்கு நோய் நீக்கும் மருத்துவ குணங்கள் உண்டு என்றெல்லாம் பிரஸ்தாபிக்கின்றனர். ஆனால் விஞ்ஞானம் இது அப்பட்டமான பொய் என்று நிரூபித்துள்ளது.
விபூதி பற்றி பேராசிரியர் கா.திருஞான சம்பந்தன் M.Sc., M.C.A.(
www.geocities.com/shivaperumant) அவர்களின் கட்டுரையைப் படித்ததில் சில சுவாரசியமான சந்தேகங்கள் எழுந்தன.
1) திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்: 1. உடல் நாற்றத்தைப் போக்கும்.
2. தொத்து நோய்க் கிருமிகளைக் கொல்லும்.
3. தீட்டுக் கழிக்கும்.
4. உடலைச் சுத்தம் செய்யும்.
5. வியாதிகளைப் போக்கும்.
6. பில்லிசூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்.
7. முகத்திற்கு அழகைத் தரும்.
8. ஞாபக் சக்தியை உண்டாக்கும்.
9. புத்திக் கூர்மையைத் தரும்.
10. ஞானத்தை உண்டாக்கும்.
11. பாவத்தைப் போக்கும்.
12. பரக்தியைத் தரும்.
முந்தைய மேற்கு ஜெர்மனியைச் சார்ந்த விஞ்ஞானக் கழகம் மாட்டுச் சாணத்தின் சாம்பலை நன்றாக ஆராய்ந்து மாட்டுச் சாணத்திற்கு மருத்துவ குணம் இல்லை என்று அறிவித்துள்ளது.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு நெற்றியில் ஏற்பட்ட ஒவ்வாமைக்கு மருத்துவர் கூறிய அறிவுரை, "விபூதி, பட்டை நாமம் இடுவதை தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தினார்.(அந்த மருத்துவர் பாகிஸ்தானிலிருந்தோ அல்லது சவ்தி அரபியாவிலிருந்தோ இதைச் சொல்லவில்லை!) இந்த விஞ்ஞான உண்மைகளை அறியாத பாமர்கள் தங்கள் இல்லங்களை மாட்டுச்சானத்தால் மெழுகியும் நெற்றியிலும் உடலிலும் மாட்டுச் சாணத்தைப் பூசிக் கொள்கின்றனர்.
2) கருநிற விபூதியும்,
செந்நிற விபூதியும், புகைநிற விபூதியும், பொன்னிற விபூதியுந் தரிக்கலாகாது எனும் பேராசிரியர் சம்பந்தனின் கூற்றுக்கு எதிராக வட்நாட்டு சங்பரிவார சண்டாளர்கள் செந்நிற விபூதியையே நாமமாக இடுகின்றார்கள்.
3) விபூதி தரியாதவருடைய முகம் சுடுகாட்டுக்குச் சமமாகும்!
இது பார்ப்பனத் தனமான உளரலாகவே எனக்குப் படுகிறது. (பேராசிரியர் பார்ப்பனர் அல்ல) விபூதியிடாத பால்வடியும் குழந்தை முகம் சுடுகாடாகவா தெரிகிறது? ஐயர்களும் ஐயங்கார்களும் விபூதியிட்டுக் கொள்வதற்கு சமயக் காரணங்கள் இருக்கலாம். மாடுகளுக்கும் சிலைகளுக்கும் ஏன் விபூதியிட வேண்டும்?
இப்பொழுது புரிந்திருக்குமே கருஞ்சட்டைக்காரர்கள் ஏன் சமஸ்கிர்தத்தில் எழுதப்பட்ட புராணங்களையும், அவை போதித்த மூடவேதங்களையும் எதிர்க்கிறார்கள் என்று! அப்புறம் கணினி மென்பொருளாக்க மொழி பற்றி சில மாணவர்களிடம் விசாரித்ததில் சி,சி++,பேசிக் போன்ற மென்பொருளாக்க கணினி நிரலிமொழிகளை, பார்ப்பனர்கள் நாம் பயன்படுத்தும் மொழிகளுடன் குழப்பிக் கொண்டுள்ளதாகவே கருத்து தெரிவித்தார்கள்.
இல்லை இல்லை பார்ப்பன தேவபாஷையான சமஸ்கிர்தம் கணினி மொழிக்கேற்றது என்று வாதிடும் எவராவது ஒரு சிறிய சமஸ்கிர்த மென்பொருள் ??? எழுதலாமே!
இதுபற்றி கணினி மொழி வல்லுனர்கள் விளக்கினால் பயனாக இருக்கும்.
எது எப்படியோ "யாமறிந்த மொழிகளே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" என்பதையே என் கருத்தாக வைக்கிறேன்.